நவராத்திரி என்பதே மகிஷன் என்ற அசுரனை வதம் செய்து, தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காக அன்னை அங்காள பரமேஸ்வரி தவமிருந்து, போர்புரிந்து, வெற்றி பெற்ற காலம் தான். கர்மவினை என்னும் அசுரனால் பலவிதமான நோய்கள், துன்பம், பொருமாதார சிக்கல், தோல்வி, வறுமை என பலவற்றால் நாம் துன்பப்படுகிறோம். அதிலிருந்து நம்மை காக்கக் கூடியவள் உலகிற்கே தாயான அன்னை அங்காள பரமேஸ்வரி தான். உலகை காப்பதற்காக அன்னை எடுத்த மகிஷாசுரமர்தினி வடிவத்தை போற்றி வழிபடுவதால் அனைத்து விதமான செல்வ நலன்களும் நம்மை வந்து சேரும்.
0 கருத்துகள்