விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசத்திப்பெற்ற ஆன்மீக தலமான அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆனி மாத அம்மாவாசை தினமா நேற்று சனிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் நள்ளிரவு 11 மணி அளவில் மகாலட்சுமி அலங்காரத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மன் கோவிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.அப்போது பக்தி பரவசமடைந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே.. அங்காளம்மா தாயே.. அருள்புரிவாயே என பக்தி பரவசமடைந்து சாமி ஆடினர். நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கான, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமிதரினம் செய்தனர்.மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஊஞ்சல் உற்வத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்கதர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து வசதிகளும், அதேபோல் பாதுகாப்பு வசதிக்காக விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈட்பட்டனர்.
0 கருத்துகள்